திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரை சென்ற 6 வயது சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்ட நிலையில், தற்போது அப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் என்பவரின் மனைவி சசிகலா மற்றும் மகள் லக்ஷிதாவுடன் அலிபிரி மலைப்பாதை வழியாக திருப்பதிக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது, சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், சிறுமியை தாக்கிக் கொன்ற சிறுத்தை பிடிபட்டது. இந்த நிலையில், தற்போது அப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டுள்ளது.
இதைக் கண்ட மலைப்பாதையில் சென்ற பக்தர்கள் சத்தம் போட்டதால் சிறுத்தை அங்கிருந்து கட்டுக்குள் ஓடியது. இதனால் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்ட இருப்பதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பாதயாத்திரையாக மலையேறி செல்ல அனுமதி இல்லை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்களில் காலை 6 மணி - மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.